districts

புதுகை அரசு பல் மருத்துவக் கல்லூரி நடப்பாண்டில் 50 மாணவர்களுடன் தொடங்கும்

புதுக்கோட்டை, மே 31-  

    தமிழ்நாட்டின் இரண்டா வது அரசு மருத்துவக் கல் லூரியான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்  லூரி நடப்பாண்டில் 50 மாண வர்களுடன் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.

   புதுக்கோட்டை-தஞ்சை  சாலையில் கால்நடை பண்ணை  அருகே கடந்த 2017ம் ஆண்டு  அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை தொடங் கப்பட்டது. இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரு காமையில் தமிழ்நாட்டின் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு தமிழ் நாடு அரசு அறிவித்தது.  

    இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு 64 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பல் மருத்து வமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பல் மருத்துவக் கல்லூரி கட்டட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.  

   இதுகுறித்து சுகாதா ரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகை யில், ‘‘புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு  பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள் சேர்க்கை யுடன் இந்த ஆண்டு கல்லூரி தொடங்க ஒன்றிய அரசு அனு மதி அளித்துள்ளது. இத னைத் தொடர்ந்து நடப்பாண் டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்’’ என்று அறி வித்துள்ளார்.