பொன்னமராவதி, மே 15-
பொன்னமராவதி வலையபட்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்தி போதிய மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி ஒன்றியம் தொட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி என்பருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகா தார நிலயத்தில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து இவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் வலிப்பு ஏற்பட்டு தேன்மொழி உயிரி ழந்தார்.
எனவே, இதுபோன்ற மரணங்களை தவிர்க்க பொன்னமராவதி வலையபட்டி அரசு மருத்துவமனையை பல்வேறு வசதி களுடன் மேம்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.