districts

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி, ஆக.6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் அரசு அறிஞர் அண்ணா மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய உலக  தாய்ப்பால் விழா அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.  மாவட்ட மருத்துவமனை இணை இயக்குநர் மரு.ஸ்ரீ பிரியா தேன்மொழி விழாவை தொடங்கி வைத்தார். வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்துறை மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பில், மதர் ஹார்லிக்ஸ்  மற்றும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் தாய்மார் களுக்கு வழங்கப்பட்டன. தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே காலகம் அரசு  ஆரம்ப சுகாதார நிலையத்தில், லயன்ஸ் சங்கம் சார்பில் தா ய்பால் வார விழா நடைபெற்றது.  லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் துரையரசன் தலைமை வகித்தார். காலகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவ அலுவலர் பொன்.அறிவானந்தம், தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விளக்கம் அளித்து பேசினார். 25 தாய்மார் களுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிரட், பழங்கள்,  பேரீச்சம்பழம் அடங்கிய சத்துப்பொருட்கள் வழங்கப்பட்டது. பாபநாசம் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் சார்பில், வீர மாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார  விழா நடந்தது. லயன்ஸ் கிளப் தலைவர் விஜயராஜன் தலைமை வகித்தார். மருத்துவர் குணசேகர பாண்டியன் தாய்ப் பாலின் மகத்துவம் குறித்து பேசினார். இதில் பங்கேற்ற 60 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.  பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னுக்குடி யில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் வக்கீல் சரவ ணன் தலைமை வகித்தார். பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில்  நடந்த விழாவில் மருத்துவர்கள் அழகு சிலம்பரசி, ஹரணி  ஆகியோர் பேசினர்.