மயிலாடுதுறை, ஏப்.3- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள்துறை சார்பில் ‘‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’’ திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 465 குழந் தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலு வலர் சோ.முருகதாஸ், வேளாண் மைத்துறை இணை இயக்குநர் ஜெ.சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர்கள் (பொது) கோ.அர.நரேந்திரன், (வேளாண்மை) ஜெயபாலன், துணை இயக்குநர் (சுகாதாரம்) குமரகுருபரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் அலுவலர் (பொ) சியமளா மற்றும் தாய்மார்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் கலந்துகொண்டனர்.