districts

img

அறந்தாங்கி ஊராட்சிப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

அறந்தாங்கி, மார்ச் 9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பல்வேறு முடிவுற்ற திட்டப் பணி களை தொடக்கி வைத்தார்.  அறந்தாங்கி அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளியில் பயிலும் 298 மாண வர்கள், நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில்  பயிலும் 101 மாணவர்கள்-90 மாணவிகள், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயிலும் 294 மாண வர்கள், சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 188 மாணவி கள் என மொத்தம் 971 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கப்பட்டன. மேலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சியில் ரூ.60.50 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்து வமனைக் கட்டிடத்தையும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், அறந்தாங்கி வரு வாய் கோட்டாட்சியர் ச.சிவகுமார், அறந்தாங்கி  மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும்  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.