districts

திருச்சி முக்கிய செய்திகள்

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கல்

பாபநாசம், செப் 15- பாபநாசம் பேரூராட்சியில் அம்ரூட்- 2.0 திட்டத்தின் கீழ் 3,741 வீடுகளுக்கு 14 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில்  குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநி லங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் திட்டத்தை துவக்கி வைத்தார். பாபநாசம் பேரூராட்சித் தலைவர்  பூங்குழலி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி,  தமிழ்நாடு குடிநீர் மேம்பாட்டு கழக திட்டப் பொறியாளர்  தியாகராஜன், மண்டல பேரூராட்சி உதவி செயற்பொறி யாளர் மாதவன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலு வலர் ரவிசங்கர், பேரூராட்சி உறுப்பினர்கள் தேன் மொழி,  முத்து மேரி, கோட்டையம்மாள், புஷ்பா, ஜாபர், சமீரா பர்  வீன், பாலு, விஜயா, பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத்  தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தஞ்சாவூரில் செப்.20-இல்  மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், செப்.14-  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த, மாற்றுத் திற னாளிகளுக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம், ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், மக்கள் குறைதீர் நாள்  கூட்ட அரங்கில் செப்.20-ஆம் தேதி காலை 11 மணிக்கு  நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு குறைதீர் கூட்டத்தில்  அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக ஆட்சி யரிடம் வழங்கிப் பயன்பெறலாம். 

பேருந்து நிலையம் வேண்டும்
பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

பாபநாசம், செப்.15- தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறை அமைச்சர் கே.என்.நேருவை, மனித நேய மக்கள்  கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாபநாசம் பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள இறைச்சி மற்றும் மீன் அங்காடியை இடித்து விட்டு, புதிய நவீன இறைச்சி மற்றும் மீன் அங்காடி  கட்டித்தர வேண்டும். அய்யம்பேட்டை, சுவாமிமலை பேரூ ராட்சிகளில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் உள்  ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். அப்போது கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை  சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உடனிருந் தார்.

ஆபத்தான சமையலறையை சீரமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

பாபநாசம், செப்.15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள்  மேல் நிலைப்பள்ளியில் 450- க்கும் மேற்பட்ட மாண வர்கள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பொரு ளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த வர்கள். இப்பள்ளியில் சத்துணவு சமையல் கூடம் பழுத டைந்த நிலையில் உள்ளது. இந்த சமையல் கூடத்தை  இடித்து விட்டு புதிய சமையல் கூடம் கட்ட வேண்டுமென  மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.42 கோடி பருத்தி விற்பனை

கும்பகோணம் செப்.14- கும்பகோணம் அருகே கொட்டையூரில் தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கும்ப கோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்ப னைக்கூடக் கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலை யில் பருத்தி ஏலம் நடைபெற்றது.  கும்பகோணம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1,820 லாட் பருத்தி கொண்டுவரப்பட்டது. சராசரி யாக 2,366 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டு  வந்திருந்தனர். கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளை சார்ந்த பத்து வியா பாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.  இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.42 கோடி.

மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை, செப்.14-  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செப்.16-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.  முகாமில் மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த  அடையாள அட்டை விண்ணப்பம் பெறுதல், சரிபார்த்தல்  மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்க பரிந்துரைகள்  செய்யப்பட உள்ளது.  இதுவரை மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய  அடையாள அட்டை பெறாதவர்கள், ஒன்றிய அரசின்  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், பிற மறுவாழ்வு உதவிகளான பராமரிப்பு உதவித் தொகை, வங்கிக்கடன் மானியம் மற்றும் உதவி உபகர ணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் பாஸ் போர்ட் அளவிலான புகைப்படம் (6), ஆதார் அட்டை  நகல் மற்றும் குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்புப் புத்தக நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு  பயன்பெறலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் 181 பயனாளிகளுக்கு  பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கல்

தஞ்சாவூர், செப்.14-  தஞ்சாவூர் மாவட்டத்தில், வேளாண் இயந்தி ரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 181 பவர் டில்லர் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் வியா ழனன்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.4-ஆம் தேதி வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை சார்பில் சிறிய வகை வேளாண் இயந்தி ரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் மதிப்பிலான 3,907 பவர் டில்லர்கள் மற்றும் 293 விசை களை யெடுப்பான் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி னார். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பவர் டில்லர் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504  கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் பவர்டில்லர்கள் வழங்கப்படும்” என்று அறிவிக் கப்பட்டது. குறைந்தளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்தி ரங்களைக் கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, முதற்  கட்டமாக ரூ.35 கோடி மானியத்தில் 3,907 விவசாயி களுக்கு பவர்டில்லர்கள் மற்றும் 293 விவசாயி களுக்கு விசை களையெடுப்பான் கருவிகள், என மொத்தம் 4,200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பவர் டில்லர் மானி யத்தில் பொதுப் பிரிவினருக்கு 214, சிறப்புப் பிரிவி னருக்கு 47 என மொத்தம் 261 வழங்க வழங்கு வதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. உழவன் செயலியில் விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சட்டமன்றத் தொகுதிகள் திருவையாறு தொகுதியில் ரூ.34.24 லட்சம் மதிப்பில் 42 பயனாளிகள், ஒரத்தநாடு தொகுதியில் ரூ.34.18 லட்சம் மதிப்பில் 41 பயனாளிகள், கும்ப கோணம் தொகுதியில் ரூ.9.91 லட்சம் மதிப்பில் 11 பேர்,  பாபநாசம் தொகுதியில் ரூ.21.92 லட்சம் மதிப்பில் 26 பேர், திருவிடைமருதூர் தொகுதியில் ரூ.21.12 லட்சம் மதிப்பில் 24 பேர், பட்டுக்கோட்டை தொகுதி யில் ரூ.20.55 லட்சம் மதிப்பில் 24 பேர், பேராவூரணி தொகுதியில் ரூ.11.92 லட்சம் மதிப்பில் 13 பேர் எனக்  கூடுதலாக 153.84 லட்சம் மதிப்பில் 181 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.  ஆட்சியர் கூறியதாவது: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைவர் தீபக் ஜேக்கப் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில், பவர்டில்லர் மற்றும் நலத்திட்ட உதவி கள் வழங்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

பொது குடிநீர்த் தொட்டியை சொந்தம்  கொண்டாடியவர் மீது நடவடிக்கை

கரூர், செப்.14- குடிநீர்த் தொட்டியை சொந்தம் கொண் டாடி, மக்களை அவதூறாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர்,  கிருஷ்ணராஜபுரம் வட்டாட்சியர் உறுதி யளித்துள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பழைய ஜெயங்கொண்டம் பேரூ ராட்சி 10-ஆவது வார்டில்தெற்கு குடித்தெரு வில் உள்ள குடிநீர் தொட்டியில் மக்கள் தண்ணீர் பிடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் குடிநீர்த் தொட்டி அமைந்துள்ள பகுதி தமக்குச் சொந்தமா னது, மற்ற சாதியினர் தொட்டியில் தண்ணீர்  பிடிக்கக்கூடாது என்று பழனியப்பன் என்பவர் கூறியதோடு, மக்களை தண்ணீர்  பிடிக்க விடாமல் ஆபாசமாக பேசுவது, அவ மரியாதையாக நடத்துவது மற்றும் சாதிய பாகுபாட்டுடன் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். பழனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 10-ஆவது வார்டு உறுப்பினர தேவி பலமுறை பேரூராட்சித் தலைவர், செயல் அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை மனு  அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காத தால் பேரூராட்சியைக் கண்டித்தும் பழனி யப்பன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அனைத்துத் தரப்பு  மக்களும் அரசின் பொது குடிநீர் தொட்டி யில் தண்ணீர் பிடிப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் பழைய ஜெயங்கொண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் வியாழனன்று சாலை மறியல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தகவலறிந்து கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், கிளைச் செயலாளர் விமல், கண்ணன், வசந்த், சுரேஷ்குமார், ராஜசேகர்,வீ.நாகராஜன், திமுக செயலாளர் மோகன்ராஜ், விசிக ஒன்றியச் செயலாளர் முருகேசன், பொன்  னுச்சாமி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுக் குடிநீர் தொட்டியை மாற்று இடத்தில் வைக்கப்  படும். பழனியப்பன் மீது நடவடிக்கை எடுக்  கப்படும் என்றும் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கும்பகோணத்தில்  மூன்று பேருக்கு டெங்கு

கும்பகோணம், செப்.16- கும்பகோணம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கும்ப கோணம் அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு மேல்  காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் மூன்று நபர்களுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் அரசு தலைமை மருத்து வமனை தலைமை மருத்துவர் பிரபாகரன் தெரி வித்ததாவது:- காய்ச்சலால் உடல் சோர்வு பேதி மயக்கம்  என வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கை களும், கூடுதலாக 70 பேர் தங்குவதற்கு தனி கட்டிடமும்  தயாராக உள்ளது. தீவிர சிகிச்சை மூலம் அனைவரும் நலம் பெறலாம். காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடையத்  தேவையில்லை. தொடர் காய்ச்சல், இருமல், சளி இருந்  தால் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற வேண்டுமென்றார். மேலும் அவர் கூறுகையில், சுகாதாரமான தண்ணீ ரையே குடிக்க வேண்டும். வீட்டில் கொசுக்கள் உற்பத்தி  ஆவதைத் தடுக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்து ழைக்க வேண்டுமென்றார்.

கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி ஆய்வு

பாபநாசம், செப்.14- தஞ்சாவூர் வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ரூ.1,750  கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை  தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்.  கூட்டுக் குடிநீர் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் நாகப்பட்டி னம் நகராட்சி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலை ஞாயிறு, திட்டச்சேரி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 980  ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1,752 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் வழங்கத் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டது.  இதையடுத்து பாபநாசம் வட்டம் வீரமாங்குடி கொள்ளி டம் ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு, பாலம் அமைத்தல், குழாய் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங் கப்பட்டது.  இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் ஆறுமுகம் பார்வையிட்டு அதி காரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். 

மாதாந்திர ஓய்வூதியம் உயர்ந்ததால் கரூரில் 54,535 முதியோர் மகிழ்ச்சி

கரூர், செப்.14- முதியோருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54,535 முதியோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்  நடைமுறையில் இருக்கின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டத்  தின் கீழ், இந்திராகாந்தி மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதி யம், இந்திராகாந்தி கைம்பெண்கள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதர வற்றோர் ஓய்வூதியம், கணவனால் கைவிடப்பட்டோ ருக்கான ஓய்வூதியம், 50 வயதிற்கு மிகாமல் திருமண மாகாத ஏழைப் பெண்களுக்கு ஓய்வூதியம், இலங்கை யிலிருந்து வந்திருக்கக்கூடிய மக்களுக்கான ஓய்வூதியம்  உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த  1,000 ரூபாய் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டு  ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப்பாதுகாப்பு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,000-த்தை ரூ.1,200-ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில், கரூர் மாவட்டத்தில், கரூர்  வட்டத்தில் 14,759, மண்மங்களம் வட்டத்தில் 7,085, புக ளூர் வட்டத்தில் 5469, அரவக்குறிச்சி வட்டத்தில் 7,474,  கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 6,328 குளித்தலை வட்டத்தில் 9,349, கடவூர் வட்டத்தில் 4,071, என மொத்தம்  54,535 பயனாளிகள் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்

மின்மோட்டாரில்  செப்புக் கம்பிகள் திருட்டு

தஞ்சாவூர், செப்.14-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,  கழனிவாசல் ஊராட்சியில், ஆழ்துளைக் கிணற்றில் உள்ள  மின் மோட்டாரில் இருந்து செப்புக் கம்பிகள் தொடர்ந்து  திருடு போய் வருகின்றது.  இதுகுறித்து, காவல்துறை விசாரித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளை நிலங்கள் மற்றும் தென்னந்தோப்புகளில், விவ சாயிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அவற்றில்  மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்துப் பாசனத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், மின் மோட்டாரில் உள்ள வயர்களைத் துண்டித்து, அதிலுள்ள செப்புக்கம்பிகளை அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.  இந்தநிலையில், புதன்கிழமை இரவு கழனிவாசல் கிராமத்தில் கல்யாணசுந்தரம், தியாகராஜன், தமிழர சன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோரது தோப்பு, வயல்வெளிகளில் இருந்த மின் மோட்டாரில் உள்ள கேபிள்கள் வெட்டப் பட்டு, செப்புக் கம்பிகள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து  சம்பந்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார ளித்துள்ளனர்.  இது பற்றி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கழனி வாசல் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தொடர்ந்து இந்தப் பகுதியில் மின்மோட்டார்களில் உள்ள கேபிள்கள்  துண்டிக்கப்பட்டு செப்புக் கம்பிகள் திருடிச் செல்லும் நிலை உள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு  இதே போல் தொடர் திருட்டு நடைபெற்றது. தற்போது  நான்கு இடங்களில், செப்புக் கம்பிகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து, காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல்

குத்தாலம் காவல் ஆய்வாளரின் கொடூரம்

மயிலாடுதுறை செப். 14- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையத்திற்கு குடும்பப் பிரச்சனை  தொடர்பாக  அளிக்கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி உறுப்பினரை கொடூரமாக தாக்கிய காவலதுறையினர், விசாரிக்கச் சென்ற   மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் சீனி வாசனையும் விட்டுவைக்கவில்லை. குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி யைச் சேர்ந்தவர் தனபதி (46) தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் குத்தாலம் ஒன்றியத்  துணைத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் உள்  ளார். இவரது குடும்பப் பிரச்சனை சம்பந்த மாக  இவர் மீது காவல்நிலையத்தில் புகார ளிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து வியாழன் காலை குத்தா லம் காவல்நிலையத்திற்கு தனபதி மாவட் டக்குழு உறுப்பினர் ராமகுருவுடன் சென்  றுள்ளார். பணியிலிருந்த காவல் ஆய்வா ளர் ஜோதிராம்  ராமகுருவை வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு தனபதியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் வலியால் துடித்துள்ளார். அவரது அலறல்  சத்தம் கேட்டு ராமகுரு உடனடியாக கட்சித்  தலைவர்களுக்கு தகவல் தெரிவித்துள் ளார். காவல்நிலையம் வந்த தலைவர் களைத் தாக்கிய காவல் ஆய்வாளர் உள்  ளிட்ட காவலர்கள் கட்சி வாகனத்தைச் சேதப்  படுத்தியோடு சாவியையும் பிடுங்கிக் கொண்டனர். காவல்துறையின் இந்த நட வடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலை வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவ லறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறை  துணைக் கண்காணிப்பாளர் மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம்                                                                                                   குடும்பப் பிரச்சனை சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் சென்ற மார்க்சிஸ்ட் கட்சி  உறுப்பினர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதோடு பிரச்சனை குறித்து விசா ரிக்கச் சென்ற மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, மாவட்டக்குழு அலுவலக வாகனத்தைச் சேதப்படுத்திய குத்தாலம் காவல் ஆய்வாளரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள  மயிலாடுதுறை மாவட்டக்குழு சம்மந்தப்பட்ட ஆய்வா ளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.