மயிலாடுதுறை, மார்ச் 10- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மகளிர் திட்டம் சார்பில் மகளிர் முன்னேற்றத்திற்காக கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 14 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனுத வியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி. வழங்கினார். விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஏ.பிரபாகர் முதன்மை மேலாளர் ராமநாதன் மற்றும் மேலாளர் பு.சதீஷ், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) யுவன்சியா ஆகியோர் கலந்துகொண்டனர்.