மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்
பாபநாசம், பிப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சாலிய மங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 125 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் களை அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலை வர் கலைச்செல்வன் வழங் கினார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாலியமங்க லம் சக்தி சிவக்குமார், பள்ளியூர் நாகராஜன், பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமார், துணைத் தலைவர் சன்.சரவ ணன், பள்ளித் தலைமை யாசிரியர் ராஜா உட்பட ஆசிரியர்கள், மாண வர்கள் பங்கேற்றனர்.
பள்ளி சுற்றுச்சுவர் கட்ட முடிவு
பாபநாசம், பிப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூ ராட்சித் தலைவர் பூங்குழலி தலைமையில் நடைபெற் றது. செயல் அலுவலர் ரவி சங்கர், துணைத் தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மூல தன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட் டில் நவீன மீன் மற்றும் இறைச்சிக்கூடம் அமைப் பது, அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சத்தில் வெங்கடேஸ்வரா நகர் பூங்கா மேம்பாட்டு பணி மேற்கொள்வது, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் கவுன் சிலர்கள், சுகாதார ஆய் வாளர் பரமசிவம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கண் சிகிச்சை முகாம்
பாபநாசம், பிப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப் பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை, பாச மலர் வெல்பேர் அசோசியேசன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் நடந்த முகாமிற்கு ஜமாஅத் சபை தலைவர் சிம்லா நஜீப் தலைமை வகித்தார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் 450 பேருக்கு பரிசோ தனை மேற்கொண்டனர். இதில் 50 பேருக்கு மேல் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆலத்தூர் ஊராட்சியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
பெரம்பலூர், பிப்.2 - பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.24 கோடி மதிப்பீட்டில் வெள்ளியன்று பல்வேறு புதிய திட்டப் பணி களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம்'
அரியலூர், பிப்.2- அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இம்முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20 தனியார் நிறுவனங்கள் பங் கேற்று, பல்வேறு கல்லூரி களில் இருந்து வந்திருந்த 561 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்தினர். இதில் தகுதியான 50 பேருக்கு பணி வாய்ப்புக் கடி தமும், 427 பேருக்கு இரண் டாம் கட்ட நேர்முகக் கடிதத் தையும் அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மா.சங்கர்கணேஷ் வழங்கி னார். கல்லூரி முதல்வர் ஜோ. டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார்.
பிப்.16 வேலைநிறுத்தத்தை விளக்கி மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, பிப்.2 - அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பிப்.16 அன்று வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கி திருச்சியில் மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்துகள், இயந்தி ரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஐ நீக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து வாகன ஓட்டுநர்களையும் பாதிக்கும் பாரதிய நியாய சன்ஹிட்டா (இந்திய தண்டனை சட்டம்) பிரிவு 106 (1), (2) திரும்பப் பெற வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் ஒரே தொழிலை நீண்ட காலம் செய்ய முடியாமல் வேறொரு தொ ழிலுக்கு மாறுபவர்கள் என்பதால், தற்போது உறுப்பினராக இருக்கும் நலவாரியத்தி லிருந்து மற்றொன்றுக்கு மாறிக் கொள்ள வழி முறைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளின் உரம், பூச்சிமருந்து, மோட்டாருக்கு பயன்படும் மின்சாரத்திற்கு மானியத்தை அதிகரித்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு செலவை காட்டி லும் கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ண யம் செய்ய வேண்டும். நூறு நாள் திட்டத்தை 200 நாளாக்கி தினக்கூலி ரூ. 600 வழங்க வேண்டும். நகர்ப்புறத்திற்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 ஐ திரும்பப் பெற வேண்டும். முன்பணம் செலுத்தி, மின்சாரத்தை உபயோகிக்கும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதை கைவிட வேண்டும். பொதுத்துறை, அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் பிப்.16 அன்று வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம் வியாழனன்று திருச்சியில் நடந் தது. பிரச்சாரத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்டச் செயலா ளர்கள் சிஐடியு ரெங்கராஜன், தொமுச ஜோசப் நெல்சன், ஏஐடியுசி சுரேஷ், எச்எம்எஸ் மாநி லச் செயலாளர் ஜான்சன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் வெங்கட் பிரசன்னா, எஸ். கே.எம். சம்சுதீன் மற்றும் அனைத்து சங்க தலைவர்கள். வெங்காயமண்டி தொமுச ராமலிங்கம், ஏஐடியுசி சிவா ஆகியோர் பேசி னர். சிஐடியு மாவட்ட பொருளாளர் மணி கண்டன் நன்றி கூறினார்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளி போக்சோவில் கைது
அரியலூர், பிப்.2 - சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்த னூர் மனகெதி காலனி தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி யன் (25). கூலித் தொழிலாளியான இவர், 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக வும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில், வீரபாண்டியனின் தாய் வேம்பு மற்றும் சகோதரி முத்து என்ற கஸ்தூரி ஆகியோர் சேர்ந்து சிறுமியின் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்து வீரபாண்டியன், அவரது தாய் வேம்பு, சகோதரி முத்து என்ற கஸ்தூரி ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்தனர். மேலும், வீரபாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரசினர் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்
கும்பகோணம், பிப்.2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், “ஒளிமின்னியலில் வளையத்தக்க கரிமச் சேர்மங்கள் சார்ந்த பன்மடிக்குறைக் கடத்திகள்” என்ற தலைப்பில் சென்னை அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணி புரிந்து ஓய்வுபெற்ற முனைவர் என்.சோமநாதன் உரை யாற்றினார். செல்பேசிகளை மிகக் குறைவான எடை யில் சுருள் வடிவத்தில் செய்ய இயலும் என்றும், காப்புரி மையின் முக்கியத்துவம் பற்றியும் விஞ்ஞானி சோம நாதன் விளக்கினார். கல்லூரி முதல்வர் அ.மாதவி தலைமையில் நடந்த இக்கருத்தரங்க ஏற்பாடுகளை வேதியியல் துறைத்தலை வர் மா.மீனாட்சிசுந்தரம், தேர்வு நெறியாளர் இரா.சா.சுந்தர ராசன், இயற்பியல் துறைத்தலைவர் அ.ரூபி ஆகியோர் செய்திருந்தனர். இதில், இயற்பியல், வேதியியல், உயிரிவேதியியல் மற்றும் விலங்கியல் துறை முதுநிலை மாணவர்கள், ஆங்கிலத் துறைத் தலைவர் சா.சரவணன், கல்லூரி நூல கர் இரா.சங்கரலிங்கம், பேராசிரியர்கள் கலந்து கொண்ட னர்.
தொழுநோய் விழிப்புணர்வு, தோல் சிகிச்சை முகாம்கள்
அறந்தாங்கி, பிப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் தோல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வியாளர் ராஜசேகர பாண்டியன் வரவேற்றார். மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கோட்டீஸ்வரன், ஸ்பர்ஷ் உறுதிமொழி எடுத்தார். மருத்துவர் மகேஸ்வரன் தோல் நோய் பரிசோ தனை செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தார். மாவட்ட துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் தொழுநோய் மருத்துவர் எம்.சிவகாமி தொழு நோய் விழிப்புணர்வு குறித்து விளக்க உரையாற்றினார். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறந்தாங்கி வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ராஜேந்தி ரன் மற்றும் அறந்தாங்கி நகர சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் த.கும ரேசன் நன்றி கூறினார்.
நீரின்றி வாடும் நெற்பயிரை காப்பாற்ற நன்மை செய்யும் பாக்டீரியா தெளிப்பு
தஞ்சாவூர், பிப்.2- தண்ணீரின்றி வாடும் நெற்பயிரை காப்பாற்ற ட்ரோன் மூலம் நன்மை செய்யும் பாக்டீரியா தெளிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், சேண்டா கோட்டை கிராமத்தில், மகாராஜாசமுத்திரம் காட்டாற்றின் தென்புறத்தில் உள்ள அக்கரைவயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 370 ஏக்கரில், 75 ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரின்றி காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண்மைத் துறை, தோட்டக் கலை துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வள ஆதாரத்துறை அடங்கிய கிராம அளவிலான நுண்ணிய செயல் திட்டக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில், பிங்க் பிக்மென்டட் ஃபேக்டில் டேட்டிவ் மெத்திலோ பாக்டீரியா (ppfm) ஜன.29, 30 ஆகிய தேதிகளில் 25 ஏக்கரில் வானூர்தி (ட்ரோன்) மூலம் தெளிக்கப்பட்டது. இதனை, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ந.க.நல்லமுத்து ராஜா, வேளாண்மை துணை இயக்குநர் ச.ஈஸ்வர், விதை ஆய்வாளர் முனைவர் நவீன் சேவியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பாக்டீரியாவானது நெற்பயிரை நீர் இல்லாத சூழலிலும், 15 முதல் 20 நாட்கள் வரை தாங்கி வளர உதவி புரியும்” என தெரிவித்துள்ளார்.
வீதிக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்: டீ கடையில் நடந்த பஞ்சாயத்து
சின்னாளப்பட்டி, பிப்.2- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை யில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தை முடித்துவிட்டு, முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் இரா.விஸ்வ நாதன் மேடையை விட்டு இறங்கிய போது, கட்சியின் பொறுப்பாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, ஒருவர் மீது ஒருவரை மாறி மாறி புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரித்து சமாதானம் செய்து வைப்பதற்காக, நத்தம் இரா.விஸ்வ நாதன் நிலக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள ஒரு டீ கடைக்கு அதிமுக நிர்வாகி களை அழைத்து சென்றார். அங்கு அதிமுக நிர்வாகிகள் சிலர், ஒன்றி யச் செயலாளர் யாகப்பன், நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி கணவர் சேகர் ஆகி யோர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களி டம் எந்தவிதமான ஆலோசனைகள் செய் யாமல், தன்னிச்சையாக செயல்படுவதாக வும், தங்களை செயல்பட விடாமல் தடுத்து கட்சியை முடக்குவதாக சரமாரியாக குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் நிலக்கோட்டை பேரூர் முன் னாள் பொறுப்பாளர் தங்கராஜ், அம்மைய நாயக்கனூர் அதிமுக முன்னாள் கவுன் சிலர் கணேசன் ஆகியோர் பல்வேறு புகார்கள் குறித்து குற்றம் சாட்டினர். இதனால், வாக்குவாதம் முற்றி ஒருவ ரையொருவர் தள்ளினர். இதனால், இவர் களை சமாதானம் செய்ய முடியாமல் திண றிய நத்தம் இரா.விஸ்வநாதன் அங்கிருந்து நழுவி காரில் ஏறி புறப்பட்டு சென்றார். ஆனாலும் டீ கடைக்குள் தொடங்கிய அதிமுக கோஷ்டி பூசல் வாக்குவாதம் சாலை வரை தொடர்ந்து நீடித்தது. இத னால், நிலக்கோட்டை அதிமுகவில் வெகு நாட்களாக நிலவி வந்த உட்கட்சி கோஷ்டி பூசல், வீதிக்கு வந்து கடும் வாக்குவாதத்து டன் முடிந்தது.
உயர்கல்வி வழிகாட்டல் களப்பயணம்
அறந்தாங்கி, பிப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவி கள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டல் களப்பயணமாக, பெருநாவலூரில் உள்ள அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கல்லூரி முதல்வர் பேரா.பாலமுருகன், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். விரிவுரையாளர் கார்த்திகேயன், டேவிட், சிட் அரசன் ஆகியோர் உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கினர். மேலும் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வ கங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று வகுப்புகள் நடத்தினர். களப் பயணத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலு வலர்கள் வழிகாட்டினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திரு.வி.க அரசு கல்லூரி முதல்வர் பணிநீக்கம்
மண்டல கல்லூரி கல்வி இயக்குநரை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
திருவாரூர், பிப்.2 - திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் பணிநீக்கம் செய்ய உத்தரவு வழங்கிய தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இயக்குநரை கல்லூரி மாணவ, மாணவிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநர் பொறுப்பு வகித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு எதிராகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி கல்லூரி கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் வெள்ளியன்று கல்லூரி கல்வி தஞ்சை மண்டல இயக்குநர் தனராஜன், கல்லூரி முதல்வர் கீதாவை 17(e) பிரிவில் பணிநீக்கம் செய்து, அதற்கான உத்தரவை கல்லூரி முதல்வர் கீதாவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் கல்லூரியை விட்டு வாகனத்தில் புறப்பட்டபோது, கல்லூரி மாணவ, மாணவிகள் வாகனத்தை சிறைபிடித்தனர். இதுகுறித்த தகவலறிந்த திருவாரூர் வட்டார காவல்துறையினர், கல்லூரி முதல்வர் கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் மாணவ,மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.