கும்பகோணம்,நவ.23- மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவி கள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரில் இணைப்புச் சக்கரத்தை நான்கு சக்கர வாகனம் என காரணம் காட்டி உரிமைத் தொகை வழங்க மறுப்பதை கைவிட்டு, உரிமை தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பழ. அன்புமணி தலைமை வகித்தார் மாவட்ட துணைத் தலைவர் ரவி, இணைச்செயலாளர் சரவணன் சுகு மார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி. எம். இளங்கோவன் விளக்கிப் பேசினார். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்குழலியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.