districts

img

பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்குக!

நாகப்பட்டினம், செப்.29 -  பயிர் காப்பீடு செய்த அனைவ ருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  2022-23 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை அனைத்து ஊராட்சிகளுக்கும் பாகுபாடு இல்லா மல் உடனே வழங்க வேண்டும் என  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளுர் வடக்கு ஒன்றி யம் சார்பில் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த,  கீழ்வேளூர் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.  அதற்கு மாறாக, ஒரு சில ஊராட்சி களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் என்.எம்.அபூபக்கர், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், டி. துரைராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.