districts

img

வனவிலங்குகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக!

பெரம்பலூர், அக்.10 - வனவிலங்குகள் சேதப்படுத்திய அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம்  இணைந்து செவ்வாயன்று பெரம்பலூர்  ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் நடத்தினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.எஸ்.சக்திவேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன், கரும்பு உற்பத்தியா ளர்கள் கூட்டமைப்பு ஆர்.வரதராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர். பெரம்பலூர் மாவட்டம் முழுவ தும் வன விலங்குகளான மயில், குரங்கு,  காட்டுப்பன்றி, மான் போன்றவை களால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். கேரளாவைப் போல  காட்டுப் பன்றிகளை நாட்டு வெடி மருந்துகளை வைத்து சுடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும். வனவிலங்கு சட்டத் திலிருந்து பன்றியை நீக்க வேண்டும்.  பெரம்பலூர் மாவட்டத்தில் எறை யூர் சர்க்கரை ஆலைக்குட்பட்ட கரும்பு  தோட்டத்தில் இடைக்கன்புழு, கொக் கக்கோ வோப்புழு போன்ற நோய் களால் கரும்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு,  கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே கரும்பு விவசாயிகளுக்கு  ஏக்கர் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரம் நஷ்டஈடு  வழங்க வேண்டும்.  மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி கள் குறித்து கணக்கெடுத்து, தமிழக அரசு வேளாண்மை பேரிடர் நிதி மற்றும்  பயிர் காப்பீட்டிலிருந்து ஏக்கருக்கு ரூ.45  ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.