districts

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் வழங்குக!

கரூர், ஜூலை 12 - ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் முதலா ளிகளை வாழவைக்க தொழிலாளர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் தொழி லாளர் சட்ட தொகுப்பை ரத்து செய்ய வேண்டும். மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.  பொதுத் துறைகளை தனியார் மய மாக்கும் தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மாறி னாலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிகள்  பாதுகாக்கப்பட வேண்டும். நிரந்தர ஊழியர் களுக்கு வழங்குவது போல் ஊதியம் உள்ளிட்ட அனைத்துப் பணப் பயன்களை யும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் அலுவ லகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், ஊரக வளர்ச்சி ஊழியர் சங்கம் மாவட்டத்  தலைவர் எம்.சுப்பிரமணியன், கட்டுமான  சங்க மாவட்டத் தலைவர் சி.ஆர்.ராஜா முகமது, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.