districts

img

குடியிருக்க இடம் வழங்க வேண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநர்கள் போராட்டம்

மயிலாடுதுறை,  ஏப்.11 - குடியிருக்க இடம் கேட்டு  10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் நேரில் மனுக்களை அளித் தும் எந்தவித நடவடிக்கை யும் இல்லாத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மயி லாடுதுறை நகர செயலாளர் டி.துரைக்கண்ணு தலை மையில் திங்களன்று 30-க்கும் மேற்பட்ட திருநர்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருநர் கிளையின் செய லாளர் கலை முன்னிலை வகித்தார். திருநர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சி ஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், ஏ.வி.சிங்காரவேலன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி  மற்றும் மாவட்டக் குழு உறுப் பினர்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். பல மணி  நேரத்திற்கு பிறகு அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் குடியிருக்க இடம் வழங்கு வதாக உறுதியளித்ததை யடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.

;