தஞ்சாவூர், ஜூன் 11- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகிற ஓட்டு நர்கள், நடத்துநர்கள் சமூக விரோதி களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தஞ்சாவூர் நகர் கிளையில் பணிபுரியும் பெரு மாக்கநல்லூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜாமூர்த்தி, ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பணியை முடித்து 12 மணியளவில் வீடு திரும்ப பணிமனை யில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செக்கடி என்ற இடத் திற்கு முன்பாக நான்கு பேர் கொண்ட சமூக விரோத கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டியுள்ள னர். இதில் காயமடைந்த ஓட்டுநர் ராஜாமூர்த்தி தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். தஞ்சாவூரில் அரசுப் போக்கு வரத்துக் கழக பணியாளர்கள், சமூக விரோதிகளால் தாக்கப்படுவதில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். இந்தத் தாக்குதலில் தொடர்பு டைய இரண்டு பேரை தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி திங்கள்கிழமை தஞ்சா வூர் ஜெபமாலைபுரம் போக்குவ ரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மத்திய சங்க பொருளாளர் எஸ்.ராம சாமி தலைமை வகித்தார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச் செல்வன், ஐஎன்டியுசி பொதுச் செய லாளர் க.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால், போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ.திருநீல கண்டன், நேதாஜி சங்க பொதுச் செயலாளர் வி.ஜெயக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் ஆர். சுப்பிரமணியன், டிஎம்எம்கே சங்க பொதுச் செயலாளர் க.குமார் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பணியில் இருக் கும், பணி முடித்து செல்லும் தொழி லாளர்களின் உயிருக்கு உத்தர வாதம் தேவை, பொதுமக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதி கள் தாக்குதல்களுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட் களை தடை செய்ய வேண்டும். வழக்கை விரைந்து கண்காணித்து விரைவான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் நகர் தற்காலிக ஓட்டுநர் ராஜாமூர்த்திக்கு, கழக நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். பணி முடித்துச் சென்ற நகர் கிளை ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக் கும், கும்பகோணம் போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.