தஞ்சாவூர், ஜன.13- ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் தராத தால், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நக ராட்சியில் சுய உதவிக்குழு மூலம் இயங்கி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு, கடந்த மாத சம்பளத்தை இதுநாள் வரை தரவில்லை எனக் கூறப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு கூட பணம் இல்லாத தால், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, வியாழனன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள், பிச்சை எடுக்கும் நூதனப் போராட் டத்தை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தினர். மேலும் ஒப்பந்த தூய்மை பணியா ளர்களுக்கு, இ.எஸ்.ஐ., இ.பி.எஃப்., தொகையை நகராட்சி இதுநாள் வரை செலுத் தாமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எங்க ளுடைய உழைப்புக்கு ஊதியம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க மறுக்கும் பட்டுக் கோட்டை நகராட்சியின் தொழிலாளர் விரோ தப் போக்கு தொடர்ந்து நீடிக்குமானால் நாங்கள் எங்களது நியாயமான கோரிக் கையை ஏற்கும் வரை காலவரையற்ற போராட் டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து, நகராட்சி அலுவலர்கள் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.