districts

img

மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து திருவாரூர், மயிலாடுதுறையில் போராட்டம்

திருவாரூர்/மயிலாடுதுறை, ஜூலை 27-

     மணிப்பூரில் நடைபெற்று வரும்  வன்முறையைக் கண்டித்து மயிலாடு துறை மாவட்டம், பொறையார் அருகே யுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூரில் கிறிஸ்  தவ கிராம நலக் கூட்டமைப்பு சார்பில் அமை திப் பேரணி வியாழனன்று நடைபெற்றது.

    பேரணியில் எடுத்துக்கட்டி, பாலூர், மாங்குடி, பெரியகூத்தூர், சிதம்பரம் கோவில்பத்து, திருக்களாச்சேரி, காரம்பள்  ளம் கிராமப் பொதுமக்கள், கத்தோலிக்க திருச்சபையின் தரங்கம்பாடி பங்குத்தந்தை அருளானந்து, தரங்கம்பாடி டி.இ.எல்.சி புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், தென்னிந்திய திருச்சபை ஆயர் தங்கத்துரை, சட்டமன்ற முன்னாள் உறுப்  பினர் சித்திக், திமுக ஒன்றியச் செயலா ளர் அப்துல் மாலிக், கூத்தூர் பால்ராஜ், எடுத்துக்கட்டி ஊராட்சி தலைவர் பைலட், ஊராட்சித் தலைவர் உதயக்குமார், ஆயப்  பாடி ஜமாத் சார்பில் நூருல்லா, தூய தெரசா மகளிர் கல்லூரி முதல்வர் காமராசர், அருட்  சகோதரிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

     மணிப்பூர் பழங்குடி மக்கள் மீது  நடைபெறும் படுகொலை, வன்கொடு மைகளைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூர், திருத் துறைப்பூண்டி, கொரடாச்சேரி, குடவாசல் முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், நன்னி லம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம், மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ் மாவட் டப் பொருளாளர் எஸ்.செங்குட்டுவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.