districts

பாஜக எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் போராட்டம்

கரூர், ஜூன் 6-

    பாலியல் துன்புறுத்த லில் ஈடுபட்ட மல்யுத்த சம்மே ளனத் தலைவரும், பாஜக  நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரிஜ்பூசன் சரண்  சிங்கை கைது செய்ய வலி யுறுத்தி ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் கரூ ரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்  றது.  

   மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கா. கந்தசாமி, மாவட்டச் செய லாளர் கே.சக்திவேல், சிஐ டியு மாவட்டத் துணைச் செய லாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்டப் பொருளா ளர் ப.சரவணன் ஏராளமா னோர் பங்கேற்றனர்.