districts

img

அரசுப் பேருந்து ஓட்டுநர், பத்திரிகையாளர்கள் மீது போதைப் பேர்வழிகள் கொலைவெறித் தாக்குதல்

தஞ்சாவூர், ஏப்.21 -  இந்தத் தாக்குதல் குறித்து, காவல்துறை உடனடி  நடவடிக்கை எடுத்து, போதை இளைஞர்களைக் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் போக்குவரத்துக் கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட ஓட்டுநருக்கு உரிய சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும்.  அவர் உடல்நலம் தேறிய பணிக்கு திரும்பும் வரை  விடுப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட செய்தியா ளர்களுக்கும் உரிய உதவிகள் செய்திட தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியு றுத்தி, ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் ஜெபமாலை புரம் நகரக் கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மத்திய சங்க பொரு ளாளர் எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். ஏஐடியுசி  மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், சிஐடியு  தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சிஐடியு கும்பகோணம் மண்டலத் தலைவர் காரல் மார்க்ஸ், மத்திய சங்க நிர்வாகி முருகானந்தம், ஏஐடியுசி கும்பகோணம் மண்டலத் தலைவர் சேகர்,  பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், சிஐடியு  தஞ்சை புறநகர் உறுப்பினர்கள் மற்றும் தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.

6 பேர் கைது கும்பகோணம், ஏப்.21- தஞ்சாவூர் மாவட்டம் பந்த நல்லூரில் இருந்து கும்பகோணம்  நோக்கி அரசு நகரப் பேருந்தை  சனிக்கிழமை இரவு திருவாய்பாடி யைச் சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் (54) ஓட்டி வந்து கொண்டிருந்தார்.  அப்போது கும்பகோணம் பாலக் கரை அருகே சாலையின் நடுவே போதையில் இளைஞர்கள் நின்று  கொண்டு, போக்குவரத்து நெரி சலை ஏற்படுத்திக் கொண்டிருந்த னர். அப்போது ஓட்டுநர் ரமேஷ்  ஓரமாக செல்லுமாறு ஒலி எழுப்பி யுள்ளார் (ஹாரன் அடித்துள்ளார்).  இதனால் போதையில் இளை ஞர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த கஞ்சா போதை யில் இருந்த இளைஞர்கள், அரசு  பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்து நரை பேருந்துக்குள் தாக்கியது டன், அவர்களை வெளியில் கீழே தள்ளி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைப் பார்த்து அச்சமடைந்த பயணிகள் சிதறி ஓடி னர். இச்சம்பவம் நடந்து கொண்டிருக் கும் போது, அவ்வழியாக சென்று கொண்டிருந்த தனியார் செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த நாடிமுத்து மற்றும் அருண்குமார் ஆகிய செய்தியாளர்கள், இந்த  தாக்குதலை ஒளிப்பதிவு செய்துள்ள னர். இதனைப் பார்த்து அந்த கஞ்சா இளைஞர்கள், “எங்களையே படம் எடுக்கிறீர்களாடா” என  தகாத வார்த்தைகளை கூறி செய்தி யாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.  இந்த தாக்குதலில், நியூஸ் ஜே  செய்தியாளர் நாடிமுத்து மற்றும்  மக்கள் தொலைக்காட்சி செய்தியா ளர் அருண்குமார் ஆகிய இருவருக் கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஓட்டுநர் ரமேஷ் மற்றும் கும்பகோணம் பகுதி செய்தியாளர்கள் நாடிமுத்து, அருண் குமார் ஆகியோர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து நடத்திய  விசாரணையில், கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன், உதயகுமார், கார்த்திகேயன், மாரிமுத்து, சந்தோஷ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியது ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள் மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து கும்பகோணம் துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் உத்தரவின்பேரில் கும்ப கோணம் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் சிவ.செந்தில்குமார் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, வழக்கு பதிந்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பொதுமக்களுக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்தி ஓட்டுநர் மற்றும்  பத்திரிகையாளர்கள் மீது தாக்கு தல் நடத்திய போதை இளைஞர் களை இரண்டு மணிநேரத்தில் கைது செய்த காவல்துறைக்கு, கும்பகோணம் பத்திரிகையாளர் நலச் சங்கம் பாராட்டு தெரிவித் துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.