districts

img

திருச்சி விமான நிலையப் பகுதியில் கடை போடும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.16 - சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கக் கோரி கடை போடும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி விமான நிலையப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தரைக்கடை நடத்தி  வருபவர்களை அப்புறப்படுத்த கூடாது. 2014  சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார சட்டத்தை மீறுவதை கைவிட வேண்டும். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சனிக்கிழமை விமான நிலையப் பகுதி யில் கடைபோடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலை வர் கணேசன் தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலை வர் மணிமாறன், தரைக்கடை சங்க மாவட்டச்  செயலாளர் செல்வி ஆகியோர் பேசினர்.