திருவள்ளூரை அடுத்த பட்டறை பெரும்புதூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் 1674 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், தலைமையில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), துரை சந்திரசேகர்(பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம்(திருவள்ளூர்),க.தீபா(திருத்தணி), திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.