செப்.15 இல் கால்நடை மருத்துவ முகாம்
தஞ்சாவூர், செப்.9- தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பூவாணம் கிரா மத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் செப்.15 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல், நண்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால்வளத்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்தும் இச்சிறப்பு மருத்துவ முகாமில், கால்நடை மருத்துவ வல்லுநர்களால் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை மேற் கொள்ளப்பட உள்ளது. இம்முகாமில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்புரையாற்ற உள்ளார். முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெறவுள்ளது. இச் சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயிகளும், கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி
கரூர், செப்.9 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்பரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலா ளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் என தாட்கோ மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளதன்படி அசல் தொகையினை வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.
நூல்கள் விமர்சனக் கூட்டம்
புதுக்கோட்டை, செப்.9- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கறம்பக்குடி கிளை சார்பில் மூன்று நூல் களுக்கான விமர்சனக் கூட்டம் வெள்ளிக்கிழமை கறம்பக் குடியில் நடைபெற்றது. எஸ்.இளங்கோ எழுதிய ‘தொலைநோக்கியால் பார்ப்பதும் மெய்’ என்ற நூலை துரை.அரிபாஸ்கர் அறிமுகம் செய்தார். எம்.ஸ்டாலின் சரவணன் விமர்சனம் செய்தார். நூலாசிரியர் ஏற்புரையாற்றினார். சுரேஷ் மான்யா எழுதிய ‘அப்பாவை வரச்சொல்லுங்கள்’ நூலை மிடறு முருகதாஸ் அறிமுகம் செய்தார். ராசி.பன்னீர்செல்வன் விமர்சனம் செய்தார். நூலாசிரியர் ஏற்புரை வழங்கி னார். சாமி கிரிஷ் எழுதிய ‘சருகு துளிர்காலம்’ நூலை பொன்.ஜெயகாந்தன் அறிமுகம் செய்தார். ஆர்.நீலா விமர்சனம் செய்தார். நூலாசிரியர் ஏற்புரை வழங்கினார். வீரபாலன், ராஜராஜன், தமிழரசன் ஆகியோர் கவிதை வாசித்தனர். சிவானந்தம், முருகதாஸ் ஆகியோர் பாடல் கள் பாடினர். முன்னதாக சு.காசிராஜா வரவேற்க, அறி வொளி முருகேசன் நன்றி கூறினார். வீ.முத்து தொகுத்து வழங்கினர்.
சமரச துணை மையம் திறப்பு
பாபநாசம், செப்.9- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நீதிமன்றத்தின் வட்ட சட்டப் பணிகள் குழு மையத்தில், சமரச துணை மையம் துவக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டலின் பேரில், பாப நாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து, இந்த மையத்தை திறந்து வைத்தார். முன்னதாக தலைமை எழுத்தர் கார்த்திக்கேயன் வரவேற்றார். இதில் அரசு வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
நீட் தேர்வு ரத்து கோரி மாணவர்கள் போராட்டம்
மயிலாடுதுறை, செப்.9 - மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும், புதிய கல்விக் கொள்கையினை திரும்ப பெறக் கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சந்தோஷ் தலைமை வகித்தார். அன்பு மணி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உரையாற்றினர். கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் கைது
கும்பகோணம், செப்.9 - தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் சுற்றுவட்டாரப் பகுதி களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் ஒரு மர்ம கும்பல் ஆயு தங்களை வைத்து பொதுமக்களை மிரட்டி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தும், இருசக்கர வாகனங் களை திருடியும் வந்தது. இந்நிலையில் வழிப்பறி கும்பலை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆசிஷ்ராவத் உத்தரவுபடி, கும்பகோணம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது. தொடர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பகோணம் செக்காங்கண்ணிதெரு பிரவீன்குமார், சூர்யா, முத்துப்பிள்ளை மண்டபம் ஒத்ததெரு ஹரிபாலாஜி, ஆகாஷ், விவேகானந்தர் நகர் அருண் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், மேற்படி நபர்களிடமிருந்து 13 விலை உயர்ந்த செல்போன்கள், 5 இருசக்கர வாக னங்கள், 10 கிராம் தங்கச் செயின், இரண்டு கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 5 பேரும் கும்பகோணம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புதுக் கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்ட னர். இதில் பிரவீன்குமார், ஹரிபாலாஜி, சூர்யா ஆகியோர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
திருச்சிராப்பள்ளி, செப்.9- திருச்சி மாநகராட்சி 5 ஆவது மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார். 27வது வார்டு மூலைகொல்லைத் தெருவில் மாநக ராட்சி உருது பள்ளியில் 3 வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப் பறை, தலைமையாசிரியர் அறை, நூலகம், சமையலறை மற்றும் கழிவறைகளுடன்கூடிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை மேயர் அன்பழகன் பார்வையிட்டார். பென்சனர் தெருவில் ஜெனரல் பஜார் மாநகராட்சி நடு நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட உள்ள இடத்தையும், பாபுசெட்டி தெருவில் ரேசன் கடை கட்டுவதற்கான இடத்தை யும், 26வது வார்டு ராமலிங்க நகர் 2வது, 3வது மற்றும் 4வது தெருக்களில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். பின்பு, 5வது மண்டல அலு வலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்திய 13 தூய்மைப் பணியாளர்களுக்கு மேயர் அன்பழகன் சால்வை அணிவித்து கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
செப்.7 சிபிஎம் ரயில் மறியலில் ஈடுபட்ட 82 பேர் மீது வழக்கு
கும்பகோணம், செப்.9- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யும், மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செப்.7 அன்று தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் மற்றும் ஒன்றிய அலுவல கங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக கும்பகோணத்தில் ரயில் மறியல் நடைபெற்றது. அப்போது போராட்டத்திற்கு தயாராக இருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை, கும்பகோணம் போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இருப்பினும் கட்சியினர் செப்.7 அன்று மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை கும்பகோணம் ரயில் நிலையத்தில் காலை 8.50 மணிக்கு மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது ரயில்வே மற்றும் நகர போலீசார் கட்சி யினரின் சட்டையை;ப பிடித்து இழுத்து கிழித்து தாக்கி, அப்புறப்படுத்தும் நடவ டிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன், சமாதானம் செய்து அனை வரையும் கைது செய்து பின்பு விடுவித்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட தாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் உள்பட 65 பேர் மீது கும்பகோணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் கும்பகோணம் ரயில்வே பாது காப்பு படை போலீசார், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தைச் சேர்ந்தவர்கள் 17 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாளை திருச்சியில் தொழில்பழகுநர் சேர்க்கை முகாம்
திருச்சிராப்பள்ளி, செப்.9 - திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சர கம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் தொழில்பழகுநர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் தொழில்பழகுநர் சேர்க்கை முகாம் செப்.11 (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி அர சினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழில்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய வருடங்களில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்விய டைந்த இளைஞர்கள் (ஆண்,பெண் இருபாலரும்) அனை வரும் கலந்து கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறு வனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில்பழகுநர்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7700 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழில் பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மாணவர்கள் இந்த சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிய திருவெ றும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத் தில் உள்ள மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 9443644967 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.
அரிசி, பருப்பு விலை உயர்வு
திருநெல்வேலி: அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. விளைச்சல் குறைவு மற்றும் வறட்சி காரணமாக அவற்றின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். திருநெல்வேலியில் சில்லறை மளிகைக் கடை களில் பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு கடந்த வாரம் கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட நிலை யில், சனிக்கிழமை ரூ.170-க்கு விற்பனையானது. சிறு பருப்பு ரூ.105-ல் இருந்து ரூ.115 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.68-ல் இருந்து ரூ.88 ஆகவும், தொலி உளுந்து ரூ.98-ல் இருந்து ரூ.120 ஆகவும், உருட்டு உளுந்து ரூ.144- ல் இருந்து ரூ.154 ஆகவும் உயர்ந்துள்ளது. அரிசி விலையும் கிலோவுக்கு ரூ.4 வரை அதி கரித்துள்ளது. கன்னட பொன்னி கிலோ ரூ.40 முதல், அட்சய பொன்னி கிலோ ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
மாணவிக்கு பாலியல் தொல்லை: உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம்
திருச்சிராப்பள்ளி, செப்.9 - திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள புனித ஜோசப் கல்லூரி வேதியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் லியோ ஸ்டான்லி. இவர் ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாணவி தரப்பில் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார். இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்த நிலையில், உதவிப் பேராசிரியர் லியோ ஸ்டான்லி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.