districts

செம்பனார்கோவிலில் பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்

மயிலாடுதுறை, ஆக. 10-

        மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் கிராமப்புறங்களில் மயான சாலைகளை சீரமைக்க வேண்டும் என  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வலி யுறுத்தினர்.

    செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் நந்தினி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை  தலைவர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர்  மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.  

       கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

       ரஜினி (விசிக): செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணா திருமண மண்டபத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். பாகசாலை, கொண்டத்தூர் பகுதியில் மயான சாலை அமைக்க நடவடிக்கை வேண்டும். சேமங்கலம், எருமல், புதுப்பேட்டை கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேவிகா (திமுக) : இலுப்பூர் ஊராட்சி  புத்தகரத்தில் மயான சாலை மற்றும் தார் சாலை அமைத்து, அங்கு சேதம டைந்துள்ள பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.

     முத்துலட்சுமி (அதிமுக)ஆறுபாதி  ஊராட்சியில் புதிதாக பகுதிநேர அங் காடி அமைக்க அனுமதி பெறப்பட்டும், இதுவரை அமைக்கவில்லை. அதனை மக்களின் நலன் கருதி விரைவாக கட்ட வேண்டும்.  

     கிருபாவதி சிவக்குமார் (திமுக): கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி பய ணிகள் நிழலகம் அருகில் சிமெண்ட் சாலையில் தண்ணீர் தேங்காத வகை யில் சீரமைக்க வேண்டும்.

   நல்லாடை ஊராட்சியில் ஈமக்கிரியை மண்டபம் புதிதாகக் கட்டவேண்டும். ஷகிலா அஜீஸ் (திமுக); சங்கரன்பந்  தல் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீன் மார்க்கெட்டை  வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஓலக்குடி கிராமத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். ராஜ் கண்ணன் (திமுக) : மடப்புரம்  ஊராட்சி மண்மலை கிராமத்தில் மயான மயான கொட்டகை, சவுரியா புரம் கிராமத்தில் மயானச் சாலை அமைக்க வேண்டும்.

    செல்வம் (திமுக ) சந்திரபாடி ஊராட்சியில் பழுதடைந்த துணைச் சுகாதார நிலையத்தை புதிதாகக் கட்டித்  தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை  ஆய்வு செய்ய வேண்டும்.

      மோகன்தாஸ் (திமுக) : செம்ப னார்கோவில் கடைவீதியில் கலைஞ ருக்கு சிலை அமைக்க வேண்டும். கலைஞரின் பெயரில் நூலகம்  அமைக்க வேண்டும். கிடாரங்கொண் டான் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கிற்  குச் செல்லும் சாலையை சீரமைக்க  வேண்டும். ஆக்கூர் ஆரம்ப சுகாதார  நேரத்தில் இரவு நேரத்தில் மருத்து வர்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.  

    லெனின்தாஸ் (திமுக): டி.மணல் மேடு ஊராட்சி நட்சத்திரமாலை கிராமத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும். காழியப்பநல்லூர் ஊராட்சி செங்கமேடு இணைப்புச் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் துடரி பேட்டையில் குடிநீர்க் குழாய் உடைப்பை சீர் செய்யவேண்டும் என்றார்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றி யக்குழுத் தலைவர் பேசுகையில், தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரி சீலனை செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினார்.