districts

img

ஓஎன்ஜிசி விஜலன்ஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

மன்னார்குடி, நவ.8 - ஓஎன்ஜிசியில் விஜிலன்ஸ் விழிப்புணர்வு வார நிறைவையொட்டி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஓஎன்ஜிசி காவிரி அசெட் சார்பில் விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரம் கடந்த  ஒரு வாரமாக கடைப்பிடிக்கப் பட்டது. இத்தினங்களில் கட்டுரை, ஓவியப்  போட்டி, ஸ்லோகன் எழுதுதல், வாக்கத்தான்  போட்டி உள்ளிட்டவை பணியாளர்களுக் கும், பள்ளி மாணவர்களுக்கும் நடைபெற்றன. விழிப்புணர்வு வார நிறைவு நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் கலந்து கொண்டார். ஓஎன்ஜிசி காவிரி செட் மேலாளர் உதய் பாஸ்வான் பங்கேற்று போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.  நிகழ்வில் காவிரி அசெட் சப்போர்ட் மேலாளர் பி.என்.மாறன், குழுப் பொது மேலாளர் (லாஜிஸ்டிக்ஸ்) கண்ணூஜி, தலைமை மனிதவள அதிகாரி கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.