முப்பெரும் விழா போட்டி: மாணவர்களுக்கு பரிசு வழங்கல் திருத்துறைப்பூண்டி, ஜூலை 19- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கர்ம வீரர் காம ராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட துவக்க விழா மற்றும் மரம் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் திருத்துறைப்பூண்டி வட்டார கல்வி அலுவ லர்கள் பாலசுப்பிரமணியன், அறிவழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனுப்ரியா, நாகை அன்புள்ளங்கள் சமூக அறக்கட்டளை ராஜாமணி, மன்னார்குடி அருவி அறக் கட்டளை சிவமணி, பள்ளி மேலாண்மை குழு பொறுப்பா ளர்கள் முன்னிலை வகிக்க, பள்ளி தலைமை ஆசிரியை கிரிஜா தலைமை வகித்தார். பேச்சு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வென்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர் களுக்கும் அருவி மற்றும் நாகை அன்புள்ளங்கள் அறக்கட்ட ளைகள் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கல்வி வளர்ச்சி நாள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.