பயிலரங்கம்
பாபநாசம், ஜன.17- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மண்டல பயிலரங்கம் பாபநாசத்தில் நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவர் தாவூது பாட்சா தலைமை வகித்தார். முன்னதாக மாநிலச் செயலர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். மாநிலத் துணைச் செயலர் பாரூக் அறிமுக உரையாற்றினார். இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் மகேஷ் பொய்யா மொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழி யன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகி தீன் உள்ளிட்டோர் பேசினர். இப்பயிலரங் கில் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்தோர் பங் கேற்றனர். மாநில துணைச் செயலர் ஜமால் முஹமது இப்ராஹிம் நன்றி கூறினார். கோலப் போட்டி பாபநாசம், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்றம், தஞ்சை ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இணைந்து, பொங்கல் பண்டிகையை யொட்டி கோலப் போட்டி நடத்தின. கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்த ரங்கோலி கோலப் போட்டியில் 25 மாணவி கள், பெண்கள் பங்கேற்ற னர். நடுவராக பிரவீன் செயல்பட்டார். இதில் ஊராட்சி மன்றத் தலை வர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் இந்திரா காந்தி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வென்றவர் களுக்கு மட்டுமின்றி, பங் கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
கோ பூஜை
பாபநாசம், ஜன.17 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆல யத்தில், உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி கோ பூஜை நடந்தது. பசுவிற்கு மாலையணிவித்து பூஜை, ஆராதனை நடந் தது. பசுவிற்கு பொங்கல், அரிசி வெல்லம், வாழைப்பழம், தீவனம் வழங்கப் பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, கவுன்சிலர் புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் திருட்டு
அரியலூர், ஜன.17 - அரியலூர் மாவட் டம் கீழப்பழுவூர் அரு கேயுள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை யின் பூட்டு உடைக்கப் பட்டு இருப்பதாக அப் பகுதி மக்கள் கீழப்பழு வூர் காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவித்த னர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இரவு பாதுகாவலர் அப்துல் லத்தீப்-யிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளி ரவு கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அப்துல் லத்தீப் கழுத்தில் அரி வாளை வைத்து மிரட்டி, கடையின் பூட்டை உடைத்து 31 பெட்டி களில் இருந்த ரூ.1.97 லட்சம் மதிப்பிலான மது பானங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அந்த நபரை தேடி வருகின்றனர்.
மணமேல்குடி: பாம்பு கடித்து சிறுவன் பலி
அறந்தாங்கி, ஜன.17 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் யூனுஸ் என்பவரின் மகன் அப்ஸர்(8). இவர் அங்குள்ள தனி யார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அப்ஸரை வீட்டின் அருகே விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக மண மேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச் சைக்காக அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில், அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறு வன் உயிரிழந்தார். மணமேல்குடி அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருந்து இல்லாததும், சிகிச்சைக்கு கால தாமதம் ஏற்பட்டதும்தான் சிறுவன் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்தும், விஷமுறிவு மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சட்ட விரோதமாக மது விற்ற 43 பேர் கைது
தூத்துக்குடி,ஜன.17- தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 16 அன்று மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ன.இதனால் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டனர்.இதில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூ.14,820 மற்றும் ஒரு இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ரூ.20 லட்சம் உரங்களை கடத்தியவர் கைது
தூத்துக்குடி,ஜன.17- தூத்துக்குடியில் குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள உரத்தை கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேய பிரபு (52). ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இவருக்கு சொந்தமான குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள ராக் பாஸ்பேட் உரங்களை மர்ம நபர்கள் லாரியில் கடத்திச் சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கடம்பூர் அருகேயுள்ள இளவேளங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஆனந்தகுமார் (24) என்பவரை கைது செய்து உரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
தூத்துக்குடி,ஜன.17- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன் (64). கட்டடத் தொழிலாளியான இவர், ஜனவரி 7ஆம் தேதி வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் பதுங்கிய மரநாய் மீட்பு
தூத்துக்குடி,ஜன.17- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை (65). சம்பவத்தன்று வீட்டு மாடியில் நின்றிருந்த இவரை மீது மரநாய் பாய்ந்து தாக்கியதாம். இதில், கீழே விழுந்ததில் அவர் காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்ததால் மரநாய் அப்பகுதியில் பதுங்கியது. இதுதொடர்பாக தீயணைப்புத் துறை, வனத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், திருச்செந்தூர் கோட்ட வனச் சரக அலுவலர் கனிமொழி தலைமையில் வனக் காப்பாளர்கள் வந்து இளைஞர்கள் உதவியுடன் மரநாயைத் தேடினர். அப்போது, அது அருகேயுள்ள பள்ளியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. சுமார் 2 வயதுடைய அந்த மரநாயை வனத் துறையினர் மீட்டு, குதிரைமொழி தேரிப் பகுதியில் விட்டனர்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கிய போக்குவரத்து துறையினர்
சின்னாளப்பட்டி, ஜன.17- திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் தைப்பொங்கல், உழவர் திரு நாள் உள்ளிட்ட தொடர் விடு முறை மற்றும் தைப்பூசத் திரு விழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல் லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட போக்குவரத்து அதிகாரி சுரேஷ் மற்றும் வத்தலக் குண்டு வட்டார போக்கு வரத்து அதிகாரி ஜாஸ்மின் தலைமையிலான அதிகாரி கள் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கொடைரோடு டோல்கேட் அருகே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கினர். மேலும் சாலை விதி களை கடைப்பிடிப்பதால் விபத்துகளை குறைப்பது குறித்தும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக் கமளிக்கப்பட்டது. இதில் நத் தம் போக்குவரத்து ஆய்வா ளர் கருப்பசாமி, வேடசந் தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அருண்ஆனந்த், திண்டுக்கல் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கிணறு - குளத்தில் மூழ்கி 2 பேர் பலி
தூத்துக்குடி,ஜன.17- தூத்துக்குடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் குளம் மற்றும் கிணற்றில் மூழ்கி 2 பேர் பலியாகினர். தூத்துக்குடி சின்னக் கண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் ராமசந்திரன் (30). இவர் பொங்கல் தினத்தன்று தனது நண்பர்களுடன் ஏரல் தாமிர பரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தால் நீரில் மூழ்கி உயிரி ழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல்துறை யினர் ழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் துளசிராஜான் (63). இவர் குடும்பத்துடன் தூத்துக்குடி அருகேயுள்ள புதுப்பச்சேரி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜன.21 இல் வாக்காளர் தின வினாடி வினா போட்டி
தென்காசி, தூத்துக்குடி ஆட்சியர்கள் அறிவிப்பு
தென்காசி,ஜன.17- தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி கள் நடத்தப்படுவதாக தென்காசி, தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள் ளனர். தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிக ரிக்கும் நோக்கில் 14 சூவது தேசிய வாக்கா ளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத் தின்படி மாநில அளவிலான பொது மக்க ளுக்கான வினாடி வினா போட்டி ஜனவரி 21 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 11 முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர் கள் கீழ்க்காணும் இணையதள முகவரி யில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். https://www.erolls.tn.gov.in/Quiz2024 இப்போட்டியில் பங்கேற்க விருப்ப முள்ளவர்கள் தங்கள் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் ஜனவரி 18, 19 (2 நாட்கள் மட்டும்) ஆகிய நாட்க ளில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பா ளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். “இந்தியாவில் தேர் தல்கள்” என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாநில உதவி மைய எண் : 1800-4252-1950, மாவட்ட உதவி மைய எண்: 1950 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித் துள்ளனர். தூத்துக்குடியில் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் “https://www.erolls.tn.gov.in/Quiz2024’ எனும் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம்.
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகர்கோவில், ஜன.17- கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் வெள்ளி யன்று (ஜன.19) காலை 10 மணிக்கு தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கன்னி யாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதி யுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் வெள்ளியன்று காலை 10 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையலாம். இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய் யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலை நாடு நர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணை யம்” Tamil Nadu Private Job Portal” (www. tnprivatejobs.tn.gov.in) என்ற இணைய தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளு மாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறரர்கள். எனவே, இச்சேவையை வேலைநாடு நர்களும், வேலையளிப்போர்களும் பயன் படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.