தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் 262 நிறுவனங்கள் மூலம் 26 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கரூர் மாநகராட்சி தாந்தோணிமலை அரசு கலை கல்லூரி வளாகத்தில் ஞாயிறன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.