திருச்சிராப்பள்ளி, டிச.23- சிஐடியு தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை தாங்கி னார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளர் சந்தி ரன், மாவட்ட தலைவர் வீர முத்து, மாவட்ட பொருளா ளர் சுரேஷ் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொரு ளாளர் கண்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்து நர்களுக்கு கழிப்பறை வசதியுடன் உடை மாற்றும் அறை கட்டித்தர வேண்டும். இரண்டு முறை போராட்ட அறிவிப்பின் போது நடை பெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.