திண்டுக்கல், பிப்.26- திண்டுக்கல் உள்ளிட்ட 32 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை ரூ.803 கோடி செலவில் தரம் உயர்த்தும் திட்டத் தினை பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். திண்டுக் கல் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.22.85 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்களன்று நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி னார். இதே போல் சோழவந்தான், திரு மங்கலம் ரயில்வே மேம்பாலங்கள். மதுரை கோட்டத்தில் 13 அம்ரித் ரயில் நிலைய மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் தேசிய அளவில் 1275 ரயில்நிலை யங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. ரயில்வே துறையில் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள், மேம் படுத்தப்பட்ட பயணிகள் வசதிகள், அழ கியல் சார்ந்த முகப்பு அம்சங்களுடன் கூடிய ரயில்நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி காணொலியில் தனது உரையில் குறிப் பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்களில் ரூ.803.78 கோடி செல விலான திட்டங்களுக்கு அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். ரூ.476.72 கோடி செலவில் 4 சாலை மேம்பாலங்கள் மற்றும் 106 சுரங்கப் பாதைகள் சாலை வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக பிரதமர் துவக்கி வைத்தார். மேலும் தமிழ்நாட்டில் ரூ.1295.16 கோடி செலவில் கூடுதலாக 30 சாலை மேம்பாலங்கள் கட்ட அடிக்கல் நாட்டி னார். 140 பாலங்களும், சாலை ரயில் சந்திப்பு லெவல் கிராசிங்குகளுக்கு மாற்றாக இது அமைகிறது. தெற்கு ரயில்வேயில் பழனியில் ரூ.13.88 கோடி, திருச்செந்தூரில் ரூ.17.50 கோடி, அம்பா சமுத்திரத்தில் ரூ.10.81 கோடி, காரைக் குடியில் ரூ.13.91 கோடி, கோவில்பட்டி யில் ரூ.12.72 கோடி, மணப்பாறையில் ரூ.10.11 கோடி. புதுக்கோட்டையில் ரூ.14.48 கோடி, ராமநாதபுரத்தில் ரூ.11.95 கோடி, ராஜபாளையத்தில் ரூ.11.70 கோடி, பரமக்குடியில் ரூ.10.56 கோடி, திண்டுக் கல்லில் ரூ.22.85 கோடி, தூத்துக்குடி யில் ரூ.12.37 கோடி, திருநெல்வேலி யில் ரூ.270 கோடி, என சாதாரண ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங் களாக தரம் உயர்த்துவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.