districts

img

உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குக! ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

உதகை, ஜன.22- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் நேரடிப் பயிற்சிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை மாணவர்களின் நலன் கருதி நிரப்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஓராசி ரியர் பள்ளிகளாக இயங்கி வரும் ஆரம்ப பள்ளிகளை ஈராசிரியர் கொண்டதாக மாற்ற வேண்டும். தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை  ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆசிரி யர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழை ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து  பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம் மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டு களாக ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல் விக்கான ஊக்க ஊதியம் கடந்த அதிமுக ஆட்சியர் பறிக்கப்பட்டது. இதை மீண்டும் வழங்க வேண்டும். பள்ளி மாணவர் களுக்கான மூன்றாம் பருவ பாடநூல்கள் தற்போது வரை பள்ளிகளுக்கு வழங்கப் படவில்லை. எனவே, தமிழக அரசு தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளியன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட் டம், கூடலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட் டார தலைவர் கே.சசி தலைமை வகித் தார். இதில், மாநிலச் செயலாளர் எஸ்.சுனில்குமார், மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ் குமார், செயலாளர் பி.கருணாநிதி, பொரு ளாளர் ஆர்.செல்வி, வட்டார செயலாளர் எஸ்.நதீரா, வட்டார பொருளாளர் சி.ராஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அன்னூர் கோவை மாவட்டம், அன்னூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், வட்டார தலைவர் பாக்யராஜ், வட்டார செயலாளர் ரபியா பேகம், வட் டார பொருளாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.