districts

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரக் கோரிக்கை

அரியலூர், ஜூலை 24-

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.  

     இதில் அரியலூர் மாவட்டம் கீழ மிக்கேல்பட்டியைச் சேர்ந்த மக்கள் அளித்த  மனுவில், தாங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது பாதையானது குறுகிய நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இப்பகுதி வழியாகத்தான் விவசா யத்திற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் விளைவித்த பொருட்களை எடுத்து  வர வேண்டிய நிலையில் உள்ளது. இந்தப் பாதையை செப்பனிட கோரி கடந்த 2012  ஆம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவர்,  கவுன்சிலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளி டம் மனு அளித்துள்ளோம். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போது உள்ள ஊராட்சித் தலை வர் 30.6.2023 அன்று சர்வேக்கு பணம் கட்டி யுள்ளார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சர்வீஸ் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை காக்க வேண்டும் என கோரியுள்ளனர்.  

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தருக!

    கல்லக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், “கல்லக்குடி கிராமத்தைச் சுற்றி  ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்  குள்ள மக்களுக்கு உடல்நலக் குறைவு  ஏற்பட்டால், 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலை யத்திற்குத் தான் செல்ல வேண்டும். அவ சர காலங்களில் பேருந்து வசதி இல்லாத தால், மருத்துவ வசதி பெறுவதற்கு மிகவும்  சிரமமாக உள்ளது. எனவே சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கல்லக்குடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும். மேலும் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி மட்டுமே உள்ளது. மேற்படிப்புக்கு கீழப்பழுவூ ருக்கு வர வேண்டியுள்ளது. எனவே இந்த நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும்” என தெரி வித்துள்ளனர்.

   மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்  கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.