மயிலாடுதுறை, செப்.2- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி புனித தெரசா பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் பொறையாறு அரசு போக்கு வரத்து கழக நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொறையாறு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஆசீர்வாதம் தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் வீரமணி முன்னிலை வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிசிலி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகை கோட்ட மேலாளர் ராமமூர்த்தி இப்பள்ளியில் விண் ணப்பித்த 265 மாணவிகளுக்கு, புகைப்படத் துடன் கூடிய தமிழ்நாடு அரசின் கட்டண மில்லா பிரிமியம் பேருந்து அடையாள அட்டை வழங்கினார்.