districts

img

விவசாயிகளுக்கு மானியத்தில் ‘தாவர காட்டுப் பன்றி விரட்டி’

பெரம்பலூர், செப்.8 - பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழ வர் நலத்துறையின் மானிய  உதவியுடன் “தாவரக் காட்டுப் பன்றி விரட்டி திரவங்களை” விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.கற்பகம் வெள்ளியன்று வழங்கினார்.  நிகழ்ச்சிக்கு பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட் சிக் குழுத் தலைவர் சி. ராஜேந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பின்னர் ஆட்சியர் கற்ப கம் கூறுகையில், “காட்டுப் பன்றிகளால் கரும்பு வயல் களுக்கு பாதிப்பு ஏற்படுவ தாக விவசாயிகள் தெரி வித்தனர். இந்நிலையை மாற்றும் வகையில் காட்டுப் பன்றிகளை விரட்டும் பண்பு  கொண்ட இயற்கை முறை யில் தயாரிக்கப்பட்ட திரவம்  வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்படுகிறது.  இந்த திரவத்தின் வாசனை யால் பன்றிகள் வயலுக்குள் வராது. இந்த திரவத்தை கரும்பு வயல்களைச் சுற்றி  எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த  செயல் விளக்கம் துறை சார்ந்த வல்லுநர்களால் அனைத்து விவசாயிகளுக் கும் அளிக்கப்படும். அரசின் மானிய உதவியுடன் வழங் கப்படும் இயற்கை முறையி லான இந்த திரவத்தை  அனைத்து விவசாயி களும் வாங்கி பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலும் உங்கள் பகுதி யில் உள்ள விவசாயி களுக்கும் இத்திட்டம் குறித்து கூறி, அவர்களையும் இத்திட்டத்தில் பயன்பெறச் செய்ய வேண்டும்” என்றார். அதனைத்தொடர்ந்து காட்டுப்பன்றிகளை விரட்டும்  திரவத்தை எவ்வாறு வயல் களில் பயன்படுத்த வேண்டும்  என்பது குறித்த செயல் விளக்கம் காண்பிக்கப்பட் டது. இந்நிகழ்வில் எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.