திருவாரூர், செப்.6 - 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற் கான தமிழக அரசால் வழங்கப்படும் உயரிய விருதானடாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னை கலை வாணர் அரங்கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மருத்துவம், மருத்து வக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஐ. லியோனி முன்னிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதினை வழங்கினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.கமலாபாய்-க்கு தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், சிறந்த கல்விப் பணிக்கான ஆசிரியர் செம்மல் விருதை பேரளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை செ.கமலாபாய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதியரசர் பி.என்.பிரகாஷ் வழங்கினார்.