districts

img

புதுகை: குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு

புதுக்கோட்டை, அக்.30 - புதுக்கேட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 200-க்கும் மேற் ட்ட மாணவர்கள் ஆய்வுக்  கட்டுரைகளை சமர்ப்பித்த னர். ஒன்றிய அரசின் அறி வியல் தொழில்நுட்பத் துறை, இந்தியா முழுவதும்  குழந்தைகள் அறிவியல்  மாநாட்டில் கலந்துகொள் ளும் மாணவர்களுக்கு ‘குழந்தை விஞ்ஞானிகள்’ விருதை ஒவ்வொரு ஆண் டும் வழங்கி வருகிறது.  இந்நிகழ்வை தமிழ கத்தில் தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் நடத்து கிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டையை அடுத்த  ஸ்ரீபாரதி கல்வி நிறுவனத் தில் சனிக்கிழமை மாவட்ட அளவிலான மாநாடு நடை பெற்றது.  அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீர முத்து தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.மாணிக்கத்தாய், செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி நிறு வன முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், குழந்தை கள் நலக்குழு தலைவர்  க.சதாசிவம், மாவட்டச் செய லாளர் மு.முத்துக்குமார், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கே. ஜோயல் பிரபாகர் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மண்டல மாநாடு புதுக்கோட்டை மாவட் டம் முழுவதும் இருந்து “நமது சுற்றுச்சூழல் மண்ட லமும் உடல் நலமும்” எனும்  மையக் கருப்பொருளின்கீழ் 5 உப தலைப்புகளில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். இதில் சிறந்த  கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு மண்டல மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.  நவம்பர் 4 அன்று புதுக் கோட்டையை அடுத்த திரு வரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூ ரியில் 10 மாவட்டங்கள் பங் கேற்கும் கிழக்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது.