districts

img

வடமாநிலத் தொழிலாளர்களுக்கே முன்னுரிமை கட்டுமானத் தொழிலாளர்கள் மறியல்

தஞ்சாவூர், பிப்.9-  அதிராம்பட்டினம் பகுதியில், வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலா ளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட கட்டு மானத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.   தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தில், வட மாநிலத் தொழிலா ளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலை சேர்மன்வாடி பகுதியில் திடீ ரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ரவிசக்கரவர்த்தி மறி யலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.