districts

‘டெஸ்ட் பர்ச்சேஸ்’ நடைமுறையை ரத்து செய்ய கோரி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.10- தமிழக முழுவதும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டெஸ்ட் பர்ச்சேஸ்க்கு எதிரான வாசகங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திருச்சி வெல்லமண்டி பழைய ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக ஓட்டினர்.  இதில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்டத் தலை வர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில், பொருளா ளர் தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில், “கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வணிக வரித்துறையினர் ‘டெஸ்ட் பர்ச்  சேஸ்’ என்ற பெயரில் சில்லறை வணி கத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் கடைகளுக்கு, அதிகாரிகள் சென்று தாங்களே பொருட்களை வாங்கி, பின்னர் அதற்குரிய வரியை செலுத்தாமல் விற் பனை செய்வதாக குற்றம் சாட்டி வணி கர்களிடம் பெரும் தொகையை அபராத மாக வசூலித்து வருகின்றனர். குறிப்பாக சில்லறை வணிகர்கள் ஏற்க னவே வரி செலுத்தப்பட்ட பொருட்களைத் தான் வாங்கி வந்து விற்பனை செய்கின்ற னர். இந்நிலையில் வரி செலுத்தப்பட வில்லை எனக் கூறி அபராதம் விதிப்பது, வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலாகும்.  எனவே தமிழக முழுவதும் நடைபெற்று வரும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி முதற்கட்ட மாக மாநிலம் தழுவிய அளவில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வணிகவரி உயர் அதிகாரிகளிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள்  கோரிக்கை மனு அளித்தனர்.  அதேபோல் மண்டல மாநில அளவி லான வணிக வரித்துறை அதிகாரிகளிட மும், டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. எனினும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை தற்போது வரை தொடர்வதால் வேறு வழியின்றி, கடை கள் முன்பு ஸ்டிக்கர்களை ஒட்டி வியாபாரி கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்” என் றார்.