தஞ்சாவூர், ஜூன் 15-
பட்டுக்கோட்டையில் பிரச்சார் பாரதி பண்பலை வானொலி (எப்.எம்) ஒலிபரப்பு அஞ்சல் நிலையத்தை அமைக்க வேண்டும் என பட்டுக் கோட்டை சமூக ஆர்வலர் வ.விவேகா னந்தம், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன் வளம், கால்நடை துறை, பால் வளத்துறை இணையமைச் சர் டாக்டர் லோ.முருகனுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
மனுவில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்ட பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட பகுதிகளில் விவசாயிகள், மீனவர்கள், வெளிநாட் டில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற் காக, பிரச்சார் பாரதி வாரிய நிர்வா கத்தில் உள்ள பண்பலை வானொலி களின் ஒலி பரப்பு அஞ்சல் நிலையத்தை பட்டுக்கோட்டையில் அமைத்து தர வேண்டும். திருச்சியில் இருந்து ஒலி பரப்பாகும் திருச்சி ரெயின்போ பண் பலை (102.1MHZ), கொடைக்கானலில் இருந்து ஒலிபரப்பாகும் கோடை பண் பலை (100.5MHZ), காரைக்காலில் இருந்து ஒலிபரப்பாகும் காரைக்கால் பண்பலை -(100.3MHZ) ஆகிய எப்.எம் வானொலி நிலையங்களின் பண்பலை ஒலிபரப்புகள் பட்டுக்கோட்டை, பேரா வூரணி, அதிராம்பட்டினம், முத்துப் பேட்டை ஆகிய பகுதிகளில் தெளிவாக கேட்பதில்லை.
எனவே, பட்டுக்கோட்டை, பேரா வூரணி வட்ட பகுதிகள் மற்றும் முத்துப் பேட்டை போன்ற கடலோர பகுதிகளில் உள்ள விவசாயிகள், வர்த்தகர்கள், மீன வர்கள், மாணவர்கள், அலுவலர்கள், மகளிர் ஆகியோர் பயன் பெறும் வகை யில் பட்டுக்கோட்டையில் குறைந்த சக்தி எப்.எம் பண்பலை வானொலி அஞ் சல் நிலையத்தை பிராச்சார் பாரதி வாரியம் அமைத்து தர வேண்டும்.
இதன் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், அரசு அறி விப்புகள் வேளாண்மை தகவல்கள், பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை செய்தி கள், மீனவர்களுக்கான தகவல்கள், வானிலை அறிக்கை, மருத்துவ நலக் கல்வி தகவல்கள் வேலைவாய்ப்பு செய்திகள், மகளிர் மேம்பாடு நிகழ்ச்சி கள், கலை , இலக்கியம் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், வர்த்தக விளம்ப ரங்கள் போன்ற பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளையும் தகவல்களையும் இப்பகுதி மக்கள் எளிதில் கேட்டு பயன் பெற முடியும்.
எனவே, பட்டுக்கோட்டையில் பண்பலை வானொலியின் ஒலிபரப்பு அஞ்சல் நிலையத்தை பிரச்சார் பாரதி வாரிய நிர்வாகம் மூலமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.