districts

பார்வைக்கோர் பயணம் விழிப்புணர்வு பேரணி

பாபநாசம், நவ.11 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப், அம்மாப்பேட்டை லயன்ஸ் கிளப், குடந்தை யூத் ஸ்டார் லயன்ஸ் கிளப், பாபநாசம் வேலுநாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து பார்வைக்கோர் பயணம், கண்தான விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு பேரணியை நடத்தின. பார்வைக்கோர் பயணம் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆளுநர் சவரிராஜ், பாபநாசம் டி.எஸ்.பி முருகவேல் ஆகியோர் 50 பேருக்கு ஹெல்மெட் வழங்கி கண் தான, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு  பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.  இதில் கூடுதல் மாவட்டப் பொருளாளர் சம்பந்தம், மாவட்டத் தலைவர்கள், லயன்ஸ் கிளப் செயலர்கள், பொருளாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கண் தானம் செய்வதன் அவசியம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.