districts

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி: பி.ஆர்.நடராஜன் எம்பி., திறந்து வைத்தார்

திருப்பூர், மார்ச் 11- கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை பி.ஆர்.நடராஜன் எம்பி.,  திறந்து வைத்தார்.  பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முத்து நக ரில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட் சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம்  லிட்டர் கொள்ள ளவு கொண்ட  மேல்நிலை குடிநீர் தொட்டி  திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார். முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர்  பங்கேற்றனர்.