மயிலாடுதுறை ஆக.4 -
மயிலாடுதுறை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான மேடைப்பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பரிசு களை வென்றனர். பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவி ரஞ்சனி கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார்.
வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா வில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மாணவிக்கு ரூ.7,000 -க்கான பரிசு காசோலையையும், சான்றிதழையும் வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆகியோர் உடனிருந்த னர்.