மயிலாடுதுறை, டிச.5- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி அருகே யுள்ள பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்த ரன் கல்லூரியின் 50 ஆண்டு கால வரலாற்று நூல் தரங்கம் பாடி டேனிஷ்-தரங்கம்பாடி கலாச்சார மைய அருங்காட் சியக வளாகத்தில் வெளி யிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை நூலின் ஆசிரியர் பேரா.பி.மரியலாசர் வெளியிட டென் மார்க் நாட்டின் ‘‘டேனிஷ் தரங்கம்பாடி நலச்சங்கத் தின்’’ தலைவர் பவுல் பீட்டர் சென், உதவி தலைவர் க்நூட் ஹெல்ஸ் இருவரும் பெற்றுக் கொண்டனர். விழாவில் த.பே.மா.லு. கல்லூரியில் கணிதத்துறை யில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.ஜெய ராஜ் பொன்னையா, தரங்கம் பாடி கடல்சார் அருங்காட் சியக இயக்குநர் ரெ.சங்கர், சமூக ஆர்வலரும், எழுத்தா ளருமான தரங்கம்பாடி சுல்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.