பொன்னமராவதி, மே 3 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொன்னமராவதி பேரூராட்சி பகுதி யில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.எல்.பிச்சை, ஒன்றிய தலைவர் வி.ஆர்.எம்.சாத்தையா தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன், விவசா யிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி, சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.குமார், எஸ். நல்லதம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொரு ளாளர் கே.சண்முகம் சிறப்புரையாற்றினார். தமிழக அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் GO(M.S) எண்.69-2021-ன்படி பொன்னமராவதி பேரூராட்சியை இணைத்து, பேரூ ராட்சி பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு மனுக்களை செயல் அலுவலர் கணேசனிடம் வழங்கினர்.