திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- புதிய இன்செண்டிவை அரியருடன் வழங்க வேண் டும். யார்டு ஷாப்பில் பார பட்சமின்றி இன்செண்டிவ் அல்லது ஒ.டி. வழங்க வேண் டும். தொழிலாளர்களின் வேலை நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்ப்பந்திக் கக் கூடாது. பொன்மலை பணிமனையில் புதிய இன் சென்டிவை உடனே அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ரயில்வே அனைத்து தொழிற் சங்கம் சார்பில் புதனன்று மாலை பொன்மலை ஆர்மரி கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயூ மகேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், ஆர்இபியூ வரத ராஜன், எம்ஆர்டியூ செழி யன், எஸ்சி, எஸ்டி சங்க பன்னீர்செல்வம், ஏஎம் எம்கே கதிரவன், டிஆர்இயூ சந்தான செல்வம் ஆகி யோர் விளக்கிப் பேசினர். இதில் அனைத்து தொழிற் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.