திருச்சிராப்பள்ளி, செப்.5- தொழிலாளர்களின் உரிமைகளுக் காக போராடி உயிர்நீத்த பொன்மலை தியாகிகள் நினைவு தினம் செப்டம்பர் 5 அன்று கடைப்பிடிக்கப்பட்டது.நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.
8 மணிநேர வேலை, ஊதிய விகித மாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 1946-இல் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் ஆட்சியில் ஹாரிசன் தலைமையிலான மலபார் போலீசார் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தோழர்கள் தங்க வேலு, தியாகராஜன், ராஜூ, ராமச்சந்தி ரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத் திடலில் உயிர் நீத்தனர்.
இவர்கள் நினைவாக பொன்மலை தியாகிகள் 78ஆம் ஆண்டு நினை வேந்தல் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் செப்டம்பர் 5 வியாழனன்று பொன்மலை சங்கத் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். இதில் மூத்த தோழர் கே.வி.எஸ் இந்துராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிவராஜ், மல்லிகா, பன்னீர்செல்வம், சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் கள் கனகராஜ், ரஜினிகாந்த், பாலு, விவ சாயத்தொழிலாளர் சங்க மாநில பொரு ளாளர் பழனிசாமி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்திரசேகர், கார்த்திகேயன், நடராஜன், மாறன் உட்பட பலர் கலந்து கொண்டு செவ்வணக்கம் செலுத்தினர்.
தியாகியின் பேரன் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் பொன்மலை தியாகி தியாகராஜனின் பேரன் சுவாமி நாதன் கலந்து கொண்டு தியாகிகள் ஸ்தூபிக்கு செவ்வணக்கம் செலுத்தி னார்.
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் மாமன்ற உறுப்பி னர் சுரேஷ், துணைச் செயலாளர் செல்வ குமார் உட்பட பலர் செவ்வணக்கம் செலுத்தினர்.