திருப்பூர், செப். 23 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங் கலூர் ஒன்றியச் செயலாளராக ஆர்.பாலன் தேர்வு செய்யப்பட்டார். பொங்கலூர் எஸ்.கந்தவேல் நினைவ ரங்கில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றிய 7ஆவது மாநாடு நடைபெற்றது. மூத்த தோழர் மா.நாட் ராயன் கொடியேற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் அஞ்சலி தீர்மானம் முன் மொழிய, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி வரவேற்றார். இம்மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், தொங்குட்டிபா ளையம் ஊராட்சி பகுதிக்கு அத்திக்கடவு குடி நீர் முறையாக வழங்க வேண்டும், பொங்க லூர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத் திற்கு கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்களை, இரவு காவலர் நியமிக்க வேண்டும், பொங்க லூர் பகுதியில் கோழிப்பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு பெருமளவு நடைபெற்று வருகிறது. எனவே இப்பகு தியில் பட்டயப்படிப்பு கொண்ட பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும், பொங் கலூர் பிஏபி பாசனக் கால் வாய் பகுதியில் அதிகளவு கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடும், தெருநாய்கள் தொல்லை யும் அதிகளவு உள்ளது. எனவே கோழிக்கழி வுகளை பொது இடங்களில், நீர்நிலைகளில் கொட்டாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொங்கலூர் பஸ் நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதை உடனே பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பொங்கலூர் ஒன்றியத்தில் 40க்கும் மேற் பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மா நாட்டில் 9 பேர் கொண்ட ஒன்றியக்குழுவும், அதன் செயலாளராக ஆர்.பாலனும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.குமார் நிறைவுரை ஆற்றினார். முடி வில் எஸ்.சிவசாமி நன்றி கூறினார்.