districts

img

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

நாகப்பட்டினம் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள கூட்டுறவு அங்காடியில் தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினை, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர், ஜன. 4 - 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொங்கலுக்கான சிறப்பு பரிசாக தமிழக அரசு  அறிவித்தது. அத்துடன் ஒரு முழு கரும்பும்  இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதனொரு பகுதி யாக, டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதி களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்க ளால் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்  திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்  விழா பெரம்பலூர் தேரடி தெருவில் உள்ள  அமராவதி கூட்டுறவு அங்காடியில் நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 1  லட்சத்து 88 ஆயிரத்து 96 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

முசிறி

திருச்சி மாவட்டம் முசிறியில் பொங்கல்  பரிசு தொகுப்புகளை திருச்சி வடக்கு மாவட்ட  கழக செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பின ருமான காடுவெட்டி ந.தியாகராஜன் முசிறி தொ குதிக்கு உட்பட்ட முசிறி புத்தூர் சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு அங்கன்வாடியில் பொது மக்களுக்கு வழங்கினார். 

திருவாரூர்

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய  விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தொகுப்பு பையை வழங்கினார். திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  

பாபநாசம்

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை பாப நாசம் அங்காடியில் திமுக பாபநாசம் தெற்கு ஒன்றி யப் பொறுப்பாளர் நாசர் வழங்கித் தொடங்கி வைத்தார். 

பொன்னமராவதி

ஆலவயலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 51இல் செயல்படும் அங்காடியில், தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு  தொகுப்பை செவ்வாய்க்கிழமை பொது மக்க ளுக்கு வழங்கினார். அரசுத் தலைமைக் கொறடா  கோவி.செழியன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்டமன்ற  உறுப்பினர்கள் திருவையாறு துரை.சந்திரசேக ரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் அலுவ லர்கள் உடனிருந்தனர். 

கரூர்

கரூர் மாவட்டத்ததில் நியாய விலைக் கடை களில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு  பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூர் மாநகராட் சிக்குட்பட்ட வேலுச்சாமிபுரம் நியாய விலைக் கடையில் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர்  டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில், சட்டமன்ற  உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளத்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாம சுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.