பாபநாசம்,ஜன.18- தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த சூல மங்கலத்தில் இளைஞர் மன்றம் சார்பில் 48 ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச் சிக்கு சூலமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுசிலா, ஒன்றியக் குழு உறுப்பினர் சத்யா ஆகியோர் தலைமை வகித்தனர். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா பரிசுகளை வழங்கிப் பேசினார். பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்டச் செயலாளர் முஹம்மது மைதீன் உட்பட கலந்துக் கொண்டனர்.