மயிலாடுதுறை, ஜன.15 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள வடகரை-அரங்கக் குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் அனீஸ் ரஹ்மான் தலைமை வகித்தார். மூன்றாவது ஆண்டாக வாலிபர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இவ்விழாவில் சங்க கொடியை ஒன்றியச் செயலாளர் சபீர் அஹ மது ஏற்றினார். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் தலை வர் ஐயப்பன், முன்னாள் மாவட்டச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியப் பொருளாளர் கபிலன் மற்றும் சங்க, ஜமாத் நிர்வாகிகள், கிராமத் தலைவர்கள் பங்கேற்றனர். போதைப் பழக்க எதிர்ப்பு சுடர் ஓட்டம் பெருகி வரும் போதைப் பழக்கத்திற்கு எதிராக மெயின் ரோட்டிலிருந்து துவங்கிய சுடர் ஓட்டத்தை செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன், அரசு மருத்து வமனை மருத்துவர் காசி விஸ்வநாதன் ஆகி யோர் துவக்கி வைத்தனர். மேலும், சுடர் ஓட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், மாணவர் களை உற்சாகப்படுத்தி வாழ்த்தினர். முக்கிய வீதிகளின் வழியாக விழிப்பு ணர்வு முழக்கங்களுடன் சென்ற ஓட்டம், விழா மேடையில் நிறைவடைந்தது. மயிலாடு துறை பாம்ஸ் ஹோட்டல் உரிமையாளர், தொழிலதிபர் முகமது சுல்தான், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்ல முத்து சுடரை பெற்றுக்கொண்டு உரை யாற்றினர். தொடர்ந்து இந்து - இஸ்லாமிய - கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றுகூடி பொங்கல் சமைத்தனர். சிறு வர்கள், பெண்கள், இளைஞர்கள், முதிய வர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், பரிசளிப்பும், மாலையில் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிளைத் தலைவர் ராபின், செயலாளர் ரமேஷ், நிஜாமுதீன், ஜாபேஷ், அபினேஸ், சந்தோஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.