districts

கணவர் தாக்கியதில் பல்செட்’ தொண்டையில் சிக்கி மனைவி மரணம் போலீஸ் விசாரணை

 தென்காசி, நவ.2- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது  42), கூலித் தொழிலாளி  யான இவர் தன்னுடைய மாமா  மகளான  சசிகலாவை (34) திருமணம் செய்து  கொண்டார். இவர்களுக்கு  பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். கணவன்- மனைவி - இடையே அடிக்கடி  குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது.  தீபாவளி பண்டிகையையொட்டி சசி கலாவின் தாயாரான வால்பாறை எஸ்டேட்  பகுதியைச் சேர்ந்த பார்வதி, தனது மகளைப்  பார்ப்பதற்காக வந்தார். அப்போது மதியம் திருமலைச்சாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது. ஆத்திர மடைந்த திருமலைச்சாமி, பாத்திரம் கழுவ  அமரும் சிறிய மரப்பலகையை எடுத்து மனைவி சசிகலாவின் முகத்தில் தாக்கிய தாக கூறப்படுகிறது. இதில் சசிகலாவின் வாயில் பொருத்தப்பட்டு இருந்த ‘பல் செட்’  கழன்று அவரது தொண்டையில் சிக்கியது.  மயங்கி விழுந்து உயி ருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு ‘ கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திரு நெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சசிகலா பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து தாயா பார்வதி அளித்த  புகாரின்  பேரில், மருமகன் திருமலைச்சாமி மீது வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.