districts

காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை, ஆக.10-  

     புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாள ராகப் பணியாற்றிய து.சங்கீதா (40), தூக்க  மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

   புதுக்கோட்டையில் ஆக.2-ஆம் தேதி  குடும்பப் பிரச்சனை வழக்கு விசாரணை  ஒன்றுக்காக ஆட்சியர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில்  மனைவியின் தரப்புக்கு ஆஜரான, வழக்க றிஞர் கலீல் ரகுமான் என்பவரை, அந்தப் பெண்ணின் கணவர் ஆரோக்கியராஜ் என்ப வர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் வழக்கறிஞரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருக்கோகர்ணம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப்  புகாரை விசாரித்த காவல் உதவி ஆய்வா ளர் சங்கீதா, குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கி யராஜைக் கைது செய்யாமல் விட்டதாக புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதைக் கண்டித்து கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப்  புறக்கணித்து, மறியலில் ஈடுபட்டனர். இந்த  நிலையில், உதவி ஆய்வாளர் சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்  தொடர்ந்து, மருத்துவ விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்ற சங்கீதா,  15 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

   தகவலறிந்து சென்ற காவலர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

   மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்க றிஞர்கள், காவல் உதவி ஆய்வாளரை அவ தூறாகப் பேசியதால் மனம் உடைந்த அவர்  இந்த முயற்சியை மேற்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.